முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஆறு மாதத்திற்குள் வடக்கிலிருந்து சிறிலங்கா படையினர் வெளியேற்றப்பட வேண்டும் என்று சிவாஜிலிங்கம் வலியுறுத்தியுள்ளார்

1331

ஆறு மாத காலத்திற்குள் சிறிலங்கா படையினர் வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பிற்காக வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள படையினரை முழுமையாக அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடமாகாணத்திற்கான பாதுகாப்பிற்காக 600 முதல் 700 ஏக்கர் வரையிலான காணிப் பகுதியில் படையினரை நிலைநிறுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், வடக்கின் வலிகாமம் பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 4,000 ஏக்கர் காணியை அரச படையினர் பயன்படுத்தி வருவதனையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலவந்தமான அடிப்படையில் இந்தக் காணிகளை அவர்கள் பயன்படுத்தி வருவதாகவும், சுமார் 600 முதல் 700 ஏக்கர் வரையிலான காணிப் பகுதி படையினருக்கு போதுமானது என்ற போதிலும்,டு பாரியளவில் காணிகளை படையினர் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும் சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *