முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியா – யப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன

616

இந்தியா – யப்பான் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரண்டு நாடுகளின் பிரதமர்களும் இன்று கையொப்பமிட்டுள்ளனர்.

இந்தியா யப்பான் நாடுகள் சம்பந்தப்பட்ட 13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற இரண்டு நாடுகளின் தலைவர்களும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடாத்தியுள்ள நிலையில் இந்த ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதேவேளை இந்தியா-ஜப்பான் நட்புறவை பலப்படுத்தும் வகையிலும் உலக நாடுகளின் அமைதி மற்றும் நிரந்தரத்தன்மையை நிலை நாட்டும் வகையிலும் இனி இந்தியா-ஜப்பான் நாடுகளின் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத் துறை மந்திரிகள் ஆண்டு தோறும் சந்தித்துப் பேசுவார்கள் என இன்றைய ஆலோசனையின் போது தீர்மானிக்கப்பட்டது.

சைபர்தளம், மின்னணுவியல், சுகாதாரம், இராணுவம், கடல் மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் பலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இரு நாடுகளுக்கு இடையிலான கடற்படை தொடர்பான கூட்டுறவை அதிகப்படுத்துவது உள்ளிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் இரண்டு நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *