முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்திய வரலாற்றில் முதற்தடவையாக திருநங்கைக்கு நீதிபதி பதவி

1095

இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஜோயிதா மண்டல் எனப்படும் திருநங்கையே இஸ்லாம்பூர் மாவட்ட மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்தியாவின் வடமாநிலங்களைச் சேர்ந்த திருநங்கைகள் பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்பட்டிருந்தாலும் நீதிபதிப்பதவி கொடுக்கப்பட்டது இதுவே முதற்தடவை எனக் குறிப்பிடப்படுகின்றது.

ஜோயிதா பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருவதுடன், திருநங்கைகளுக்கான சங்கம் ஒன்றினை அமைத்து அவர்களுக்கு பலவகையிலும் உதவிகளை புரிந்து வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இத்தகைய அவருடைய சமூகப்பணிகள் காரணமாகவே தற்போது அவருக்கு நீதிபதிப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *