இலங்கை மீது சர்வதேசம் அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையில் சர்வதேசத்தின் தலையீட்டை உறுதிபடுத்திய மஹிந்த ராஜபக்ஷ, இன்று அதனை விலக்கிக் கொள்ளுமாறு கோருவது எவ்வகையில் என அக்கட்சி எழுப்பியுள்ளது.
மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் சர்வதேச நாடுகளுக்கு செவி கொடுக்காமல் மிகவும் கடுமையான போக்கை கடைபிடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது,
அவ்வாறான நடவடிக்கைகள் காரணமாகவே இன்று சர்வதேசத்தின் தலையீடு அதிகரித்துள்ளது என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.