ஏமன் நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியக் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏமனின் முக்கிய பகுதியான ஹூடேய்டாவில் உள்ள மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன் சந்தையில் நேற்று வியாழக்கிழமை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை படுகாயம் அடைந்த 50இற்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏமனில் போரினால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்து வரும் 80 இலட்சம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்கள் எடுத்துச்செல்லும் முக்கிய வழித்தடமாக ஹூடேய்டா துறைமுகம் விளங்கிவருகின்ற நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.