கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக மாநில அரசு சார்பில் விடுவிக்கப்பட்ட 1000 கோடி ரூபாவில் வேளாண் பொருள் பாதிப்புக்கு 350 கோடி ரூபா ஒதுக்கப்ப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் வேகமாக நடந்து வருகின்ற நிலையில் இந்த நிவாரண நிதிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் ‘கஜா’ புயல் மற்றும் கனமழை காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.