கனடாவில் அனைவரும் வீடுகளைப் பெற்றுக்கொள்ள இயலும் தன்மையானது 28 ஆண்டுகள் காணாத மோசமான நிலையினைத் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கனேடிய றோயல் வங்கியின் பொருளியல் வல்லுனர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
கனேடியர் ஒருவர் தனக்கு சொந்தமாக வீடு ஒன்றினை வைத்திருப்பதற்கான இயலுமை, 1990ஆம் ஆண்டின் பின்னர் இந்த அளவுக்கு மோசமானதாக இருந்ததில்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு வீடுகளை பெற்றுக் கொள்வதற்கான இயலும் தன்மை துரதிஸ்டவசமாக நாளுக்கு நாள் மோசமடைந்து செல்வதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் வட்டிவீதம் அதிகரித்துள்ளமை மற்றும் வீட்டு அடைமான வீதம் அதிகரித்துள்ளமை ஆகியனவே இதற்கான காரணம் என்று குறை கூறப்படுவதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக வன்கூவர், ரொரன்ரோ, விக்டோரியா மார்க்கெட்ஸ் ஆகிய இடங்களிலேயே இவ்வாறு வீடுகளை பெற்றுக்கொள்ளும் இயலுமை கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.