காசாமுனையில் இஸ்ரேல் நேற்று நடாத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர் என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஹமாஸ் இயக்கத்தினரை குறிவைத்து குறித்த தாக்குதலை தாங்கள் மேற்கொண்டதாக இஸ்ரேல் படையினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் இராணுவத்தினரை குறிவைத்து ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூடுக்கு பழிவாங்கும் விதமாக இந்த குண்டுவீச்சை நடத்தியதாகவும் இஸ்ரேல் இராணுவத் தரப்பு கூறியுள்ளது.