சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முதல் கட்சியாக கட்டுப்பணத்தைச் செலுத்தியது.
யாழ். மாவட்ட தேர்தல்கள் செயலகத்துக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு வருகைதந்த அந்தக் கட்சியின் யாழ்ப்பாண உதவி நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் கட்டுப்பணத்தைச் செலுத்தினார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு கட்டுப்பணத்தை ஏற்கும் நேற்று தொடக்கம் டிசெம்பர் 13 ஆம் திகதிவரை என தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அறிவித்தது.
வடக்கில் சாவகச்சேரி நகர சபைக்கு மட்டுமே வேட்டு மனு கோரப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அதில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று கட்டுப்பணத்தைச் செலுத்தியது.
சாவகச்சேரி நகர சபை தேர்தலில் போட்டியிட கட்டுப்பணத்தை முந்திக்கொண்டு செலுத்தியது ஈ.பி.டி.பி
Nov 28, 2017, 20:45 pm
1200
Previous Postஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Next Postயாழ்ப்பாணத்தில் சர்வதேச எயிட்ஸ் நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு!