சிம்பாவேயில் போராட்டம் நடாத்திவரும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீது அரசாங்கத் துருப்புகள் மேற்கொண்டுள்ள துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அங்கு முன்னெடுக்க்பபட்ட போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள்பபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்களன்று சிம்பாவேயில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் சானு பி.எஃப் கட்சி அதிக நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக இன்னும் முழுமையாக வெளியாகாத அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், போராட்டங்களையும் நடத்தியுள்ள நிலையில், அங்கு வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
போராட்டங்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் செயலில் உள்ள வெடிபொருட்களை இராணுவத்தினர் பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளதுடன், போராட்டம் நடாத்திவரும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் மீது அரசாங்கத் துருப்புகள் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவையும், பிரித்தானியாவும் தங்களின் கவலைகளை வெளியிட்டுள்ளன.
அரசியல்வாதிகள் நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலாளர் அண்ரோனியோ குட்டர்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வன்முறையால் ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஹாரியட் பால்ட்வின் தெரிவித்துள்ளார்.