சிரியாவின் கிளர்ச்சியாளர்களின் பகுதியில் தங்களின் தாக்குதல்கள் தொடரும் என்று சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் தற்காலிகப் போர்நிறுத்தம் நடப்பில் இருந்தும், அரசுப் படைகளின் வான் தாக்குதல் தொடர்வதாகவும், உயிரிழப்புக்கள் மேலும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
கிழக்கு கெளட்டா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் 11 குழந்தைகள் உட்பட சுமார் 34 பேர் உயிரிழந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்திருந்தது.
அதன் பின்னராக நேற்று பின்னிரவில் இருந்து இன்று அதிகாலை வரை ஹுமேரிய்யே உள்ளிட்ட பகுதிகளில் சிரிய அரசின் விமானப்படைகள் நடத்திய தாக்குதலில் மேலும் 14 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு கெளட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதல்களுக்கு கண்டம் வெளியிட்டுள்ள அமெரிக்கா, இந்த தாக்குதல்கள் கொடூரமானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அதிபர் பஷார் அல் அசாத்தின் முக்கிய கூட்டாளியான ரஷ்யா, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எனக்கூறி அப்பாவி பொதுமக்களை கொல்வதாகவும் அது தெரிவித்துள்ளது.
ஐ.நா.வின் போர் நிறுத்த தீர்மானத்திற்கு பிறகும் ரஷிய போர் விமானங்களும் கிழக்கு கூட்டாவில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் கிளர்ச்சியாளர்களின் பகுதியில் தனது அரசு படைகள் முன்னேறிச் செல்வதனால் தாக்குதல் தொடரும் என்று சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான போர் நிறுத்தம் என மேற்கத்திய நாடுகள் கூறுவது அபத்தமான பொய் எனவும் அவர் கூறியுள்ளார்.