முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சென்னையில் ஸ்டெர்லைட் ஆய்வு குழுவின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது

600

சென்னையில் வரும் 24 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு குழுவின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் மூலம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

எதிர்வரும் 22 ஆம் நாள் முதல் ஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்யும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருந்த நிலையில், தருண் அகர்வால் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தருண் அகர்வால் குழுவிற்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிகாட்டியுள்ளது.

வழக்கு நிலுவையில் உள்ளதால் தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *