முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுளள்னர்.

1509

அநுராதபுர சிறைச்சாலையில் உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டு்ளள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுளள்னர்.

மதியரசன் சுலக்சனின் தாய் மற்றும் சகோதரி, இராசதுரை திருவருளின் மனைவி, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், சிவன் அறக்கட்டளையின் நிறுவுனர், அறக்கட்டளையின் இணைப்பாளர் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் சில கோரிக்கையை முன்வைத்து இன்று 21 ஆவது நாளாக உணவுப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல எனவும், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமுடியும் என்றும் முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *