முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்பதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கவுள்ளது

568

நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்பதற்கு பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பு வழங்கும் என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஊடகவிலாளரிடம் இதனைத் தெரிவித்துள்ள அவர், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் கைலாய யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்களுக்கு உதவி செய்வதில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வரும் கைலாச புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேரை மீட்பதற்காக நடவடிக்கை ஏற்கனவே தொடங்களப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு முன்னரரே தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியப் பக்தர்கள் சிக்கிக்கொண்டுள்ள பகுதிகளுக்கு சிறிய இரக வானூர்திகள் அனுப்பப்ட்டு மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதுவரை 140இற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *