முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்கள் 11ஆம் ஆண்டில் இன்று நினைவு கூறப்படுகின்றனர்

920

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் மேற்கொண்ட வான் தாக்குதலில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகள் வீரச்சாவை தழுவிக் கொண்டனர்.

பிரிகேடியர் தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட மாவீரர்களை தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் உள்ள தமிழர்க்ள இன்று 11ஆவது ஆண்டில் நினைவு கூர்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவேந்தல் இன்று 02.11.2018 மாலை 5 மணியளவில் சபாபதி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *