பிரெக்ஷிட்டின் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் ஸ்கொட்லாந்தை விட்டு வெளியேறத் தேவையில்லை என்று ஸ்கொட்லாந் முதல்; மந்திரி நிக்கோலா ஸடோர்ஜான் (Nicola Sturgeon) கோரிக்கை விடுத்துள்ளார்.
நிகலோ ஸ்டோர்ஜான் தற்பொழுது பிரான்ஸிற்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரஜைகளும் ஸ்கொட்லாந்தில் தங்கியிருப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகளை எப்போதும் தாம் வரவேற்பதாக குறிப்பிட்ட அவர், ஸ்கொட்லாந்தில் சுமார் ஏழாயிரம் பிரெஞ்சு மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புpரெக்ஷிட் எனப்படும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி பிரிந்து செல்லும் நடவடிக்கை குறித்து பிரதமர் தெரேசா மே பல்வேறு கட்ட பேச்சுக்களை மேற்கொண்டுவரும் நிலையில், ஸ்கொலாந்து முதல் மந்திரியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.