முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு இன்று நினைவுகூரப்படுகிறது.

1605

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள ரவிராஜின் சிலையடியில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துரைராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மாமனிதர் ரவிராஜின் உடன்பிறவா சகோதரர் முதலாவது சுடரை ஏற்றி நினைவு வணக்க நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

வடமாகாண சபை உறுப்பினர் சயந்தன், தமிழரசுக்கட்சி சாவகச்சேரி தொகுதிக்கிளை தலைவர் அருந்தவபாலன், சாவகச்சேரி நகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினரும் நகர இளைஞர் கழக தலைவர் கிஷோர் உட்பட பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டு மலர்தூவி தீபம் ஏற்றி அகவணக்கம் செலுத்தியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *