முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்

651

மற்றவர் வாழ்விற்காக
மண்ணிலே புதைந்த
வீரமறவர்கள்
நாங்கள் வாழ
உருகி ஒளிர்ந்த மெழுகுகள் .
இரவில் விழியுறங்காது
கால் கடுக்கவிருந்து
இருளை விரட்டி
விடியலை விடுவித்தவர்கள்.
அகதியாய் அலையாமல்
தமிழனின் புதிய வரலாற்றை எழுதிய
காவிய நாயகர்கள்.
முகம் தெரியாத
இருட்டு வாழ்க்கைக்கு
இடமளிக்காமல்
போருக்கு புறப்பட்ட
புரட்சிப் பூக்கள்.
தமிழீழ எல்லைக்கே
வேலியாய் நிரைத்த
எல்லையோரக் காவலர்கள்.
தாயவள் விலங்குடைக்க
தன்னுயிர் ஈய்ந்திட்ட
தற்கொடையாளர் நீங்களன்றோ
தமிழீழ காவல் தெய்வம்.

கார்த்திகை வீரர் !

காரிருள் சூழ்ந்து
கண்ணீர் சிந்திட
கரங்களை இணைத்து
காட்டினில் புகுந்து
கானகம் கடந்து
காற்றென விரைந்து
கழுத்தினில் மாலைகள்
நஞ்சென அணிந்து
கரும் போலியென
எழுந்து
கடமை பெரிதென
உணர்ந்து
உயிர் பூவாய்
மடிந்து
உறவுக்காய் மரணித்த
கார்த்திகை வீரர்கள்
நிலையாய் என்றும்
மனங்களில் இன்றும்
கரம் தனை தூக்கி தொழுவோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *