கைது செய்யப்பட்ட வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த துரைராசா ரவிகரன், அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகவும், காவற்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தி முல்லைத்தீவில் உள்ள காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.
பின்னர் முல்லைத்தீவு பதில் நீதவான் பரஞ்சோதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் முன்னிலைபடுத்தப்பட்டபோது அவருக்கு பிணை அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.