முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வரட்சி காரணமாக வடக்கு உள்ளிட்ட 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் ……

637

வரட்சி காரணமாக வடக்கு உள்ளிட்ட 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிலவும் கடும் வரட்சி காரணமாக 4 இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
வடக்கு மாகாணத்தில் மட்டும் 24,207குடும்பங்களைச் சேர்ந்த 84,656பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாணம் தவிர்ந்த எட்டு மாகாணங்களைச் சேர்ந்த 14 மாவட்டங்களில் வரட்சி நிலை தொடர்வதாகவும், இதனால் 99,226 குடும்பங்களைச் சேர்ந்த 4,07,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அந்த நிலையம் தெரிவித்தது.
அம்பாறை, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, குருநாகல், புத்தளம், கேகாலை, மாத்தளை, கண்டி, கம்பஹா, மாத்தறை, களுத்துறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 59பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர் முகாமைத்துவ மத்திய உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் 24,207குடும்பங்பளைச்சேர்ந்த 84,656பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *