முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

வவுனதீவில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல்துறையினர் தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

732

மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் காவல்துறையினர் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை முன்னாள் போராளிகள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் இருவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதுடன், பல கோணங்களில் புலனாய்வு பிரிவு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வவுணதீவு, வலையிறவு பாலம் அருகில் காவல்துறை வீதி சோதனைச் சாவடியில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு கடமையில் இருந்த காவல்துறையினர் இருவர் இனந் தெரியாதோரால் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகியும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சம்பவத்தை அடுத்து காவல்துறை மா அதிபர் குறித்த இடத்திற்கு சென்றதுடன், 7 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு பிரிவு குழுவை கொழும்பில் நியமித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் என்பவர் மற்றும் அதன் உறுப்பினர், புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் கட்சி உறுப்பினர் உட்பட முன்னாள் போராளிகள் மற்றும் பெண்கள் உட்பட 20 பேரை மட்டக்களப்பில் உள்ள பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவு காரியாலயத்துக்கு அழைத்து சென்று வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்ட இராசநாயகம் சர்வானந்தம் அங்கிருந்து மட்டக்களப்பிற்கு கொண்டுசெல்லப்பட்டதுடன், அவருடன் மட்டு. தாண்டியடி பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் உட்பட இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *