வெளிநாடுகளில் சட்டவிரோத சொத்துகள், கறுப்பு பணம் வைத்துள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு எதிரான பாரிய நடவடிக்கையை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.
இதை இந்திய மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுஷில் சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார்.
வருமான வரித்துறையின் இந்த கண்காணிப்பு வளையத்துக்குள் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியர்கள் வெளிநாடுகளில் செய்த பண பரிமாற்ற விவரங்களை நிதி புலனாய்வு பிரிவிடம் இருந்து வருமான வரித்துறை பெற்றுள்ளதாகவும், அதன் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் கறுப்பு பணம், சட்டவிரோத சொத்துகள் வைத்துள்ளவர்களுக்கு எதிராக 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய கறுப்பு பண ஒழிப்பு சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.