அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணியான மிச்சேல் ஒபாமாவின், கொள்கைப் பணிப்பாளர்களில் ஒருவராக இருந்த இலங்கைத் தமிழ்ப் பெண்ணான,கிரிசாந்தி விக்னராஜா, மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்குப் போட்டியிடவுள்ளார் என்று கூறப்படுகிறது.
மேரிலன்ட் மாநில ஆளுனர் பதவிக்கான தேர்தலில் களமிறங்குவது பற்றி தாம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக, அமெரிக்க வாழ் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கிரிசாந்த விக்னராஜா, வொசிங்டன் போஸ்ட் நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
பலர் என்னைக் களமிறங்குமாறு ஊக்குவிக்கிறார்கள், இதுபற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன் என்று, 37 வயதான, கிரிசாந்த விக்னராஜா, வொசிங்டன் போஸ்ட் செய்தியாளருக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இலங்கைத் தமிழ்ப் பெற்றோரின் மகளான கிரிசாந்தி மேரிலன்ட் ஆளுனர் பதவிக்குப் போட்டியிடுவதை அங்குள்ள தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த அமெரிக்கர்கள் வரவேற்றுள்ளனர்.