முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

அரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

714

அரச தலைவரும் பிரதமரும் அதிகாரப் போட்டியில் இருந்ததன் விளைவாகவே நாட்டில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளைப் போல இவர்களும் இந்த விடயத்தில் குற்றவாளிகளாகவே கருதப்படுகிறார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் நிலைமை தற்போது இயல்பு நிலைமைக்கு திரும்பிவிட்டதாக கூறிய போதிலும் மக்கள் அச்சத்துடன் தான் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இன்னும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியுள்ளது என்பதே இதன் ஊடாக தென்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இயற்கை அனர்த்தமாக இருந்தால் நாம் அமைதியாக இருக்கலாம், எனினும், இது திட்டமிடப்பட்ட தாக்குதல் என தெரிவித்துள்ளார்.

இதன் பின்னணியில் அரசியல் நோக்கமொன்று உள்ளது. இதனை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

புலனாய்வுத்துறையினர் தகவல் வழங்கியும் நடவடிக்கை எடுக்கத் தவறியவர்களும், தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுமே  இந்த குண்டுத் தாக்குதலின் பிரதான குற்றவாளிகள் என குற்றம் சுமத்தியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *