முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டாப் பயணததைத் தொடர்ந்து இன்று உகண்டா சென்றுள்ளார்

777

தென்னாப்பிரிக்க நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா நாட்டைத் தொடர்ந்து உகண்டா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று உகண்டா நாட்டின் எண்ட்டெபே நகரை சென்றடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசேவேனி தலைமையில் முப்படையினரின் அணிவகுப்புடன் கூடிய உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்தியப் பிரதமருக்கு உகாண்டா அதிபர் யோவேரி முசெவேனி விருந்து அளிக்கிறார்.

இந்த பயணத்தின் போது உகாண்டா நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இந்தியா – உகாண்டா இடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என்றும் எதிர்பாப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *