பிரித்தானிய கண்காணிப்பு செயற்கை கோள்கள் இரண்டு, இந்தியாவிலிருந்து இன்று விண்ணுக்கு ஏவப்படவுள்ளன.
அண்மையில் கேரளாவைத் தாக்கியது போன்ற வெள்ளம் உட்பட பல இயற்கை அனர்த்தங்களைக் கண்காணிப்பதற்காக இந்த இரண்டு செயற்கை கோள்களை பிரித்தானிய விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
இவை தரைமட்டத்திலிருந்து 583 கிலோமீற்றர் உயரமும் ஒவ்வொன்றும் 450 கிலோகிராம் எடையையும் கொண்டதாகும்.
இவை இந்திய போலார் வான்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் சிறப்பு வாகனத்தில் ஏற்றப்பட்டு, விண்ணுக்கு ஏவப்படும் இடத்திற்குக் கொண்டு செல்லப்படுமென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த இரண்டு செயற்கைக்கோள்களும் இந்தியாவின் சிறீஹரிகோடாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இன்று விண்ணுக்கு ஏவப்படவுள்ளன.
குறித்த வேலைத்திட்டத்திற்கான செலவில் 300 பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட பணத்தை, பூகோள விண்வெளிக்கான தாபனத்திடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.