முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கையின் தற்போதை அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யாது புதிதாகவே அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

1316

இலங்கையில் புதிதாக அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டுமே தவிர தற்போதைய அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்படக் கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் சாசன நிபுணருமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் நெகிழ்வுப் போக்குடன் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ள அவர், அரசியல் சாசனத் திருத்தங்கள் ஒரு தனிப்பட்ட நபரின் நலனுக்கானது அல்ல என்பதுடன் அது ஒட்டுமொத்த மக்களுக்குமானது எனவும் விபரித்துள்ளார்.

கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட அரசியல் சாசனங்கள் தனிப்பட்ட அரசியல் கட்சிகளின் விருப்பு வெறுப்புக்களை உள்ளடக்கி, அதன் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி நடாத்தி வருவதாகவும், இதனால் மக்களுக்கு நலன் அளிக்கக்கூடிய வகையில் புதிய அரசியல் சாசனத்தை உருவாக்குவதற்கு சாத்தியமுண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனத்தில் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் அரச மதம் என்று எதுவும் கிடையாது எனவும் கூறியுள்ளார்.

பௌத்த மதத்திற்கு அதி முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், ஏனைய மதங்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே மதம் குறித்த தற்போதைய சரத்துக்களில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியமிருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு புதிய அரசியல் சாசனம் வழியமைக்கும் எனவும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பை மீறும் வகையில் மாகாண சபை செயற்படுமாயின், அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்த்துறை பிரிவிற்கான ஆட்சேர்ப்பு, மாற்றங்கள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மாகாண சபை நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் என்பதுடன், காவல்த்துறை விசாரணைகளில் மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் தலையிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது குறித்து நீதிமன்றங்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரே அதிகாரங்களை கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பை வரையும் நடவடிக்கை தற்போது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும், அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட ஆறு வழிநடத்தல் குழுக்களும், பிரதான விடயங்களான அரசு, இறைமை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி, தேர்தல் முறைமை, மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் அதிகார பகிர்வு ஆகியன குறித்து தொடர்ந்தும் கலந்துரையாடிவருவதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *