இலங்கை நிலவரங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.
இது தொடர்பாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இலங்கைவின் பிந்திய நிலவரங்களை, ஐ.நா பொதுச்செயலர் பாரிய கரிசனையுடன் கவனித்து வருகிறார் எனவும், சனநாயக பெறுமானங்களை மதிக்குமாறும், அரசியலமைப்பு விதிகளையும், செயல்முறைகளையும் பின்பற்றுமாறும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் இலங்கை அரசாங்கத்தை கோருவதாக அவர் அந்த அறி்க்கையில் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும், கட்டுப்பாட்டுடனும், நெருக்கடியான நிலைக்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறும் ஐ.நா பொதுச் செயலாளர் கோருகிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும், கட்டுப்பாட்டுடனும், நெருக்கடியான நிலைக்கு அமைதியான முறையில் தீர்வு காணுமாறும் ஐ.நா பொதுச் செயலாளர் கோருகிறார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.