உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்ட ரொரன்ரோ மாநகரசபை இன்று முதல் தடவையாக கூடவுள்ளது.
45 ஆக இருந்த ரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட்டின் நடவடிக்கை காரணமாக 26 ஆக குறைக்கப்ப்டட நிலையிலேயே அண்மையில் ரொரன்ரோ மாநகரசபைத் தேர்தல் நடந்து முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் நகரபிதாவாக மீண்டும் ஜோன் ரொறி தெரிவு செய்யப்பட்ட நிலையில், புதிய மாநகரசபையின் முதல் அமர்வு, குறைக்கப்பட்ட எண்ணிக்கையான உறுப்பினர்களுடன் இன்று முதன்முறையாக கூடவுள்ளது.
அந்த வகையில் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ள மாநகரசபை அமர்வில், நகரபிதா ஜோன் ரொறி, ஏற்கனவே மாநகசரபை உறுப்பினர்களாக இருந்து மீண்டும் தெரிவான 22 பேர், புதிதாக தெரிவான 3 பேர் கூடவுள்ளனர்.