உள்நாட்டு போரால் சீர்குலைந்த சிரியாவை மறுகட்டமைப்பு செய்யவும், அங்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும் ஆயிரம் கோடி டொலர் நிதியுதவி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
வளைகுடா நாடான சிரியாவில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
அங்கு கடந்த சில ஆண்டுகளாக ஐ.எஸ்.க்கு எதிராக சண்டையிட்டு அவர்கள் வசமிருந்த அனைத்து பகுதிகளையும் அமெரிக்கா தலைமையிலான படை தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா தலைமையிலான படையின் வசம் இருக்கும் ரக்கா நகரை சுற்றியுள்ள பல பகுதிகளை மறு கட்டமைப்பு செய்யவும், விவசாயம், கல்வி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு நிதியுதவி செய்யப்போவதாக சவுதி அரேபியா தற்போது அறிவித்துள்ளது.
இதற்காக ஆயிரம் கோடி அமெரிக்க டொலரை வழங்க உள்ளதாகவும் சவுதி அரோபியா விபரம் வெளியிட்டுள்ளது.