எரிபொருள் விலை உயர்வை கைவிடுவதாக பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக கடந்த 3 கிழமைகளாக போராட்டங்கள் நடாத்தப்பட்டதுடன், இதன்போது வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்றது.
இதனை அடுத்து சனவரி மாதம் 1ஆம் நாளில் இருந்து நடப்பிற்கு வர இருந்த எரிபொருளுக்கான வரி ஆறு மாத காலத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்படும் என்று கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்படடது.
இருந்த போதிலும் இந்த வார இறுதியில் சில போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் எரிபொருளுக்கான வரி விதிப்பை அடுத்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திலிருந்து கைவிடுவதாக பிரான்ஸ் நாட்டின் பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார்.
புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இதனைக் கூறியுள்ள அவர் அரசு பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.