எஸ்.என்.சீ லாவலின் நிறுவன மோசடிகள் குறித்த விசாரணைகளை கிடப்பில் போடுவதற்கு லிபரல் அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
லாவலின் நிறுவனம் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதனை அம்பலப்படுத்தாதிருப்பதற்காக முன்னாள் நீதி அமைச்சர் மற்றும் முன்னாள் சட்ட மா அதிபரான ஜோடி வில்சன் றேய்போல்டிற்கு லிபரல் அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்தது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை முடிவுறுத்திக் கொள்ளும் வகையில் பெரும்பான்மை லிபரல் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என எதிர்க்கட்சிகள் தெரிவத்துள்ளன.