முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது

717

ஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

முறையற்ற எல்லை தாண்டுதல் நடவடிக்கைகள் மூலம் கனடாவுக்குள் நுளைந்து ஒன்ராறியோவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளோரின் தேவைகளை நிறைவு செய்வதற்கே இந்த அளவு தொகை தேவையாக உள்ளதாக ஒன்ராறியோவின் சிறுவர்கள் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இதுவரை ஒன்ராறியோவுக்குள் வந்துள்ள ஏதிலிகளுக்காக ரொரன்ரோவில் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக தங்ககங்களுக்காக 74 மில்லியன் டொலர்களும், சமூக உதவித் திட்டங்களுக்காக 90 மில்லியன் டொலர்களும், ஏதிலிகளின் பிள்ளைகளின் பாடசாலை மற்றும் கல்வி உதவிச் செலவீனங்களுக்கா 20 மில்லியன் டொலர்களும் என்று, இதுவரை 200 மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளதாகவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் நாட்டுக்குள் வரும் அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்வது மத்திய அரசின் கடமையே என்பதே முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அவர் விபரித்துள்ளார்.

அகதிகளை உள்வாங்குதல் என்பது தம்மால் ஏற்படுத்தப்ப்டட ஒரு விடயம் அல்ல எனவும், மத்திய அரசினால் ஏற்படுத்தப்ப்டட இவ்வாறான ஒரு நிலைமைக்காக மாநில அரசாங்கம் செலவு செய்ய முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *