ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மன்றத்தில் இருந்து அமெரிக்கா விலகுகிறது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவிலாளரைச் சந்தித்த போது இதனைத் தெரிவித்துள்ள அவர், அரசியல் சார்பின் முரண்பாடு காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் பற்றிய கேலிக்குரிய ஒரு பாசாங்குத்தனமான மற்றும் சுய சேவை நிறுவனத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றம் செயல்பட்டு வருவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவே இந்த அமைப்பில் இருந்து விலகுவது என்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை அமைப்பில் இருந்து வெளியேறி விடுவோம் என்ற மிரட்டலை தொடர்ந்து விடுத்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பில் இருந்தும், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது மனித உரிமை மன்றில் இருந்தும் வெளியேறுகின்றமை குறிப்பிடத்தக்கது.