முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் தான் என்று டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்

681

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் எனவும், ஆயுத மோதலின் போதே பிரதான புலிகள் காணாமல் போனார்கள் என்றும், சிறீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணியைச் சேர்ந்த டிலான் பெரேரா, எஸ்.பி திசாநாயக ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போனோர் அனைவரும் புலிகளாக உள்ள நிலையில், இவர்களுக்காக சிறிலங்கா பாதுகாப்பு படைகளின் பிரதானியை தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே இதனைத் தெரிவித்துள்ள அவர்கள், கடத்தப்பட்டவர்கள் மாணவர்களா, அல்லது வேறு யாருமா என்று தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு, கடத்தல், கொலை, கைதுகள் என்று அனைத்துமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *