காணாமல் போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க
வலியுறுத்தி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களின் கையெழுத்துகள் அடங்கிய மனுக்கள், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையிலும், கனடாவின் நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நிகழ்ந்தது என்பது தொடர்பாக சரியான விபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை என்பதுடன், அவர்கள் விடயத்தில் நீதி கோரி, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நீண்டகாலமாக காத்திருக்கின்றனர் என்பதும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விடயத்தில் வினைத்திறனான செயற்பாட்டை முன்னெடுக்க இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று குறித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.