காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஒன்பது பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பில் அதற்கு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் கர்நாடக அரசு இன்னும் தங்களது பிரதிநிதிகளை நியமிக்காது உள்ளதுடன், நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் குமாரசாமி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
இந்த நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 9 பேர் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதுடன், கர்நாடகாவை தவிர்த்து, மத்திய மற்றும் 3 மாநில உறுப்பினர்களின் பெயர்களையும் அது அறிவித்துள்ளது.
இந்த ஆணையத்தின் தலைவராக மத்திய நீர்வளத்துறை தலைவர் மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுடன், அந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் அமையும் என்றும் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.