இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளத்தை ‘தீவிர பேரிடர்’ என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள பெரு வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் தீவிரம் என்பவற்றின் பாதிப்பின் அளவை கருத்திற்கொண்டு, அதை ‘தீவிர இயற்கை பேரிடர்’ என்று அறிவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேரளாவில் கடந்த பத்து நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், இந்த வெள்ளத்தில் சிக்கி 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பருவமழை பெய்வது குறைந்துள்ளதால், வெள்ளப்பெருக்கால் பெரும் பாதிப்புக்குள்ளான கேரளாவில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.