கேரள மாநிலத்தில் கனமழை இன்னமும் தொடரும் நிலையில், கொச்சி வானூர்தி நிலையம் 18ஆம் நாள் வரை மூடப்படுகிறது.
பெரியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வானூர்தி நிலையத்தினுள் தண்ணீர் தேங்கியுள்ளதுடன், இதன் காரணமாக வானூர்திகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து வானூர்தி நிலையம் மூடப்படும் என்ற அறிவிப்பு விடுக்க்பபட்டுள்ளது.
இதேவேளை அங்கு இன்னமும் கனமழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.
பாதிக்க்பபட்ட பகுதிகளில் மீட்புப் படையினர் நிவாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா.