முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சசிகலா தொடர்பில் தகவல் வெளியிட்ட சிறை அதிகாரி இடமாற்றம்!

1088

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள சசிகலாவிற்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக பரபரப்பு தகவல்களை வெளியிட்ட சிறை அதிகாரி ரூபா பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைத்துறை உதவி அத்தியட்சகராக பணியாற்றிய அவரை, வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவிற்கு மாற்றுமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி அவர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டதால் இந்த பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு குறிப்பிட்டுள்ளது.

சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், அதற்காக கர்நாடக சிறைத்துறை இயக்குநர் சத்யநாராயண ராவ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்கப்பட்டதாகவும் ரூபா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள சத்தியநாராயண ராவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சசிகலாவிற்கு அக்ரஹாரா சிறையில் போயஸ் கார்டன் ஒன்று உருவாக்கப்பட்டு வந்ததாக, ரூபா நேற்றைய தினம் வெளியிட்ட பிறிதொரு அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *