முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

1576

சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கவனத்திற் கொள்ளப்படும் என்று ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளரது பேச்சாளர் ஸ்டீபன் டுஜொரிக் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தினர் சித்திரவதைகளுடன் தொடர்புபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் படையினர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர் என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இந்தக் கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் சிலர் தாம் சித்திரவதைக்கு உட்பட்டதாக அண்மையில் தம்மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் குறித்து முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளை பிரித்தானிய ஊடகம் ஒன்று ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *