முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

சோமாலியாவில் 27 இராணுவ வீரர்களை கொன்று இராணுவத்தினரின் தளம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக பயங்கரவாத குழு அறிவித்துள்ளது

513

சோமாலியாவில் 27 இராணுவ வீரர்களை கொன்று இராணுவத்தினரின் தளம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளதாக அல் சபாப் பயங்கரவாத குழு அறிவித்துள்ளது.

கிஸ்மயூ துறைமுக நகருக்கு சற்று தொலைவில் அமைதுள்ள அந்த நாட்டின் இராணுவ தளத்தின் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்றை மோதி வெடிக்கச் செய்து பின்னர் உள்ளே புகுந்து சண்டையிட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த சண்டையில் 27 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சில வீரர்கள் காட்டுப் பகுதிக்குள் தப்பி சென்றதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான சோமாலியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இயங்கி வரும் அல் சபாப் பயங்கரவாத குழு சோமாலியா, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *