முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஜப்பானுக்கு ஞானசார தேரர் தப்பியோட்டம்!

1082

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவின் ஆதரவுடனும் பாதுகாப்புடனும் செயற்பட்டுவந்ததாக கூறப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், போலி கடவுச்சீட்டு மூலம் நாட்டை விட்டுத் தப்பிச்சென்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது.

விஜேதாச ராஜபக்சவின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டவுடன் திடீர் என்று மௌனித்துப் போன ஞானசார தேரர், போலி கடவுச்சீட்டு மூலம் கடந்த 1ஆம் திகதி ஜப்பானுக்குத் தப்பிச் சென்றிருப்பதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களில் ஒருவரான உலபனே சுமங்கல தேரர் என்பவரே ஞானசார தேரருக்கு போலி கடவுச்சீட்டு பெற உதவியுள்ளதாகவும் குறித்த இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் இருவரும் ஜப்பானில் உள்ள விகாரையொன்றில் வசித்து வருவதாகவும் அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் இருந்த போதும் நல்லாட்சியிலும் அவர் சட்டத்தின் பிடியில் சிக்காமல் வலம் வந்து கொண்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *