முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஜெனிவாவில் இனிமேலும் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்க முடியாது என்று சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்

565

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசுக்கு மேலும் காலஅவகாசம் வழங்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், முழுமையாக இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் இலங்கை அரசு மேலதிக கால அவகாசத்தை கோரலாம் என்று கூறப்படுகின்ற நிலையில், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனிடம் வினவப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *