தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்ள பொய்யானவை என்பதனை தன்னால் நிரூபிக்க முடியும் என்று அண்மையில் பதவி விலகிய ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் பற்றிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.
இன்று தனது முகநூலில் வெளியிட்டுள்ள நீண்ட ஒரு பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ள அவர், தன்மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தான் ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் நிகழ்ந்ததாக, பெயர் குறிப்பிடப்படாத இரண்டு பெண்கள் கூறியதாக, தன்மீது சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டுகளில் காணப்படும் குறித்த சில விடயங்களே, தன்மீதான இந்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என்பதனை நிரூபிக்கும் வகையில் உள்ளன எனவும் அவர் விபரித்துள்ளார்.
அந்த வகையில் தன்மீதான இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யான கதைகளே எனவும், எனவே அவற்றை விரைவில் நிரூபித்து, தன்மீது பூசப்பட்டுள்ள கறைகளை அகற்றுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.