தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதற்கான இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டம் பரவையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடக்குவாசல் செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தரக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய தினம் நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கோயில் நிலங்களை மீட்பதற்கான அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை எனத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, அறநிலையத் துறை ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.