முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தமிழ் பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாள் காலமானார்.

416

தமிழ் பத்திரிகைத் துறையில் நீண்டகாலமாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளர் பி.எஸ்.பெருமாள் என அழைக்கப்படும் சின்னக்கண்ணு பெருமாள் தனது 86ஆவது வயதில் காலமானார். 

இரத்தினபுரியில் 1933 ஆம் ஆண்டு பிறந்த அவர் மாணவராக இருந்த காலப் பகுதியிலேயே பத்திரிகைத் துறையில் ஆர்வம் மிகுந்தவராக இருந்தார். வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தனது பத்திரிகைத்துறையை ஆரம்பித்தார்.

பின்னர் 1961 ஆம் ஆண்டு ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராகத் தனது பணியினை தொடர்ந்தார். அங்கு சிறிது காலத்திலேயே ஈழநாடு வாரமஞ்சரியின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

 

அதன் பின்னரான காலப் பகுதியில் உதயன் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் , ஆசிரிய ஆலோசகராகவும் பணிபுரிந்தார்.

55 வருடங்களாகப் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர் தனது 84 ஆவது வயதில் 2017 ஆம் ஆண்டு பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது 86 ஆவது வயதில் காலமானார். அவரின் இறுதி விருப்பப்படி அவரது உடல் யாழ்.மருத்துவ பீட மாணவர்களின் ஆய்வுக்காக மருத்துவ பீடத்திற்குக் கையளிக்கப்பட்டது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *