முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

தாய்வானை அடுத்தடுத்து தாக்கிய சூறாவளி: பொதுமக்கள் அவதி

1075

தாய்வானின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை இரண்டாவது முறையாகவும் ஹைடாங் (Haitang) சூறாவளி தாக்கியுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) வீசிய கடும் சூறாவளியால் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு என்பனவும் ஏற்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலைமை காரணமாக பெருந்தெருக்கள் மூடப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சூறாவளி நேற்றும் தாய்வானைத் தாக்கியிருந்த நிலையில், சுமார் 100 பேர் காயமுற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். தாய்வானில் இதுபோன்று அடுத்தடுத்து சூறாவளி தாக்கியிருப்பது கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகே என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *