திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் கருணாநிதிக்கு சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்த்தொற்றின் காரணமாக உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதிக்கு சிகிச்சையளித்துவரும் காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதைக் குணப்படுத்த தேவையான மருந்துகள் தரப்பட்டுவருவதாகவும் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலேயே மருத்துவமனைக்கான வசதிகள் செய்யப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவர்கள் அடங்கிய குழு அவரைக் கண்காணித்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆகியோர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்று ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நலன் குறித்து இன்ற விசாரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளரிடம் பேசிய அமைச்சர்கள், கருணாநிதி விரைவில் உடல் நலம் பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்ததுடன், அரசியல் பண்பாட்டின் அடிப்படையில் கருணாநிதியின் உடல் நலத்தை விசாரிக்ச் சென்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.