முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

திருகோணமலை, சம்பூர், இலக்கந்தை கடற்பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளன

543

திருகோணமலை, சம்பூர், இலக்கந்தை கடற்பிரதேசத்தில் பல இடங்களில் நிலைத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து அரைக்கிலோ ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பூரில் உள்ள காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் படி இவை கண்டெடுக்கப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 5 கிலோ 550 கிராம் நிறையுடைய 21 ஹெரோயின் பொதிகள் இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி சுமார் 66 மில்லியன் ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து கெண்டு வந்து விநியோகத்திற்காக இவற்றை புதைத்து வைத்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

2009ஆம் ஆண்டின் பின்னர் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான போதைப் பொருள் புழக்கம் இயல்புக்கு மாறாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான சம்பவங்களுடன் காவல்துறையினருக்கும் தொடர்பு உள்ளதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *